சமூக வலைத்தளமான X-ல் வெளியாகியுள்ள ஒரு காணொளி, பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நெருக்கடி மிகுந்த ஒரு பேருந்தில் அல்லது ரயிலில், இரண்டு நபர்கள் அந்தப் பெண்ணிடம் மிக மோசமாக அத்துமீறி நடக்கின்றனர். சுற்றிலும் இவ்வளவு கூட்டம் இருந்தும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இவ்வளவு துணிச்சலாக ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க இவர்களுக்கு எப்படி மனம் வந்தது என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது.
Her father worked as a bike taxi driver, and he sadly passed away.
So she is now working as a Rapido driver.
She is a hundred times better than unemployed feminist girls and mujra girls on Instagram.
Respect to girls like her. pic.twitter.com/ZkIlPoiucg
— ︎ ︎venom (@venom1s) January 12, 2026
இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், அந்தப் பெண் பயந்து போய் எதிர்க்காமல் இருப்பதே இது போன்ற நபர்களுக்குத் துணிச்சலைத் தருகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ஒரு பக்கம் அந்தப் பெண்ணின் மௌனம் விமர்சிக்கப்பட்டாலும், மறுபுறம் ‘கூட்டத்தில் நடக்கும் இத்தகைய அநீதிகளைப் பார்த்தும் மற்ற பயணிகள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியும் உரக்க எழுகிறது. பெண்களின் பாதுகாப்பு என்பது அவர்கள் கையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பிலும் இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை முகத்தில் அடித்தாற்போல் உணர்த்துகிறது.
