இன்று வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படக் குழுவினரை நோக்கி, பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய மண் தமிழகம் என்றும், தமிழ் மொழிக்காகக் கொடுத்த அந்தப் போராட்ட வரலாற்றை மையமாக வைத்தே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிடும்போது, தமிழ் உணர்வைச் சிதைக்கும் வகையில் “தெலுங்கு வாழ்க” என மாற்றியிருப்பது ஏன் என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sister dropped a slipper shot,
delivered straight to the point! 👏🏼🔥Boycott Parasakthi!… #JanaNayagan pic.twitter.com/9ooVMx37QG
— STR Λ NGER (@Stranger__D2) January 9, 2026
வரலாற்றைப் பேசும் படத்தில் வியாபாரத்திற்காக இப்படி மொழியையும் உணர்வையும் மாற்றுவது முறையற்றது என்று அவர் அந்த வீடியோவில் சாடியுள்ளார். “தமிழ் மொழிக்காக நடந்த போராட்டத்தை வைத்துப் படம் எடுத்துவிட்டு, பக்கத்து மாநிலத்திற்குச் செல்லும்போது இப்படி மாற்றுவது நியாயமா?” என்ற அவரது கேள்வி இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண்ணின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால், ‘பராசக்தி’ படத்தைச் சுற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
