குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கோத்தாரியா பகுதியில், ஒரு பெண்ணை வளர்ப்பு நாய் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோலக்ஸ் சாலையில் அமைந்துள்ள சுர்பி பாசிபிள் பிளாட்ஸ் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வு முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வீடியோவில், பாயல் கோஸ்வாமி என்ற பெண்ணின் செல்ல நாய், லிப்டுக்காக காத்திருந்த குடியிருப்பாளர் கிரண் வகேலாவை நோக்கி திடீரென ஆக்ரோஷமாக பாய்ந்தது. நாய் உண்மையில் கடித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதன் நடத்தை வகேலாவுக்கு பயத்தை ஏற்படுத்தியது.
Shocking CCTV from Rajkot, Gujarat: Pet dog lunges at woman Kiran Vaghela near a lift, but owner Payal Goswami slaps the victim instead of helping—sparking outrage over pet responsibility and entitlement. Video exposes heated confrontation at Surbhi Possible Flats. Demand action… pic.twitter.com/VvD4rOSKaX
— Naresh Darna (@nareshdarna) November 28, 2025
சம்பவத்துக்குப் பிறகு, நாயை கட்டுப்படுத்த வந்த நபரிடம் வகேலா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதும், நாய் உரிமையாளர் பாயல் கோஸ்வாமி திடீரென கோபம் கொண்டு வகேலாவை அறைந்ததாகக் காணப்படுகிறது. இதனால் அங்கு கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நாய் உரிமையாளரின் தாக்குதல் மற்றும் பொறுப்பற்ற நடத்தை குறித்து பயனர்கள் இணையத்தில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். பலர் ராஜ்கோட் நகர காவல்துறையை டேக் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்தார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
