மழையில் நனைந்தபடி, எடை பார்க்கும் இயந்திரத்துடன் (Weight Machine) சாலையில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டிக்கு (Granny), எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் (அன்னியர்) உதவி செய்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மழை பெய்ததால், வியாபாரம் இல்லாமல், அந்த மூதாட்டியின் முகத்தில் மிகுந்த சோர்வும், விரக்தியும் காணப்பட்டது. இருப்பினும், அன்றைய இரண்டு வேளை உணவுக்காகப் பணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவர் அங்கேயே அமர்ந்திருந்தார்.
View this post on Instagram
வாடிக்கையாளர் யாரும் வராததால், அந்த மூதாட்டி மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்த நிலையில், அந்த வழியாக வந்த ஒரு இளைஞர், சற்றும் தாமதிக்காமல், எதுவும் பேசாமல், அந்த மூதாட்டியின் எடை பார்க்கும் இயந்திரத்தின் மீது ஏறி நின்றார். இதனால், மூதாட்டியின் கண்களில் திடீரென மகிழ்ச்சியின் பிரகாசம் தோன்றியது.
இளைஞர் எவ்வளவு பணம் என்று கேட்டபோது, மூதாட்டி தயக்கத்துடன் “ஐந்து ரூபாய்” மட்டுமே கேட்டுள்ளார். அந்த இளைஞரின் கருணை, அன்றைய தினம் மூதாட்டிக்கு உதவ மட்டுமல்லாமல், வாழ்க்கை மீதான அவரது பார்வையையே மாற்றிய ஒரு அற்புதம் என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
