ராஜஸ்தானின் ராஞ்சம்போர் புலி பாதுகாப்பு பகுதியில் திங்கள் காலை ஜிப் சஃபாரி நிகழ்ச்சியின் போது, பிரபல புலி ரித்தி (T-124) தனது மகள் மீரா ஆகியோரிடையே கடுமையான பிரதேசப் போராட்டம் நடந்தது. இந்த அரிய சம்பவத்தை சுற்றுலாப்பயணிகள் காமிராவில் பதிவு செய்தனர்,

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூங்காவின் மூன்றாவது மண்டலத்தில் நிகழ்ந்த இந்த மோதல், பசுமையான காட்டுப் பின்னணியில் இரண்டு நிமிடங்கள் நீடித்தது. முதலில் மீரா தனது அம்மாவை சவால் செய்து பிரதேசத்தை கைப்பற்ற முயன்றாள், இதனால் இருவரும் உரத்த கூக்குரலுடன் போராடினர்.

இறுதியில் அனுபவமிக்க அம்மா புலி ரித்தி மேலோங்கி வென்று, மீராவை காட்டின் ஆழமாக தள்ளி அனுப்பினார். இந்தப் போராட்டத்தில் இரு புலிகளுக்கும் காயங்கள் ஏற்பட்டன.

இந்தப் போராட்டம் இயற்கை நிகழ்வே என்று காட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினுள்ளனர், குறிப்பாக புலிகள் வளர்ந்து தனி பிரதேசங்களை உருவாக்க விரும்புவது இது சகஜம்.

7 வயது ரித்தி, பிரபல புலி ஆரோஹெட் (T-84) இன் மகள்; 2023இல் அவள் மூன்று புலிகளைப் பெற்றெடுத்தாள், அவற்றில் மீரா மூத்த பெண் புலி .

ஆரோஹெட், புலி ராணி மச்சலியின் பேரப்பேத்தியாக இருந்தவள்,  நோயால் கடந்த ஜூன் மாதம் இறந்தார். ரித்தி, தனது பாட்டியின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, படம் ஏரி, ராஜ்பாக், மாலிக் ஏரி பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறாள். இந்த வீடியோவை பார்த்த சுற்றுலாப்பயணிகள், இது ஒரு காலத்தில் ஒருமுறை அனுபவம் என்று பெருமையாகக் கூறுகின்றனர்.