தானே மாவட்டத்தின் டோம்பிவிலி பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம், 22 வயது இளைஞன் ஒருவர் 11-வது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த கொடூரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரிஷிகேஷ் பாரப் என்ற இளைஞன், டோம்பிவிலி மேற்கு ராஹுல் நகரைச் சேர்ந்தவர். சில சச்சரவுகளால் மனம் உடைந்து போயிருந்ததாகத் தெரிகிறது. இச்சம்பவத்துக்கு முன், அவர் நிறைவான நேரம் ஸ்டேர் கேஸில் உட்கார்ந்திருந்தார்.
பின்னர், ஸ்டேர் கேஸ் பாதுகாப்பு சுவருக்கு அருகில் சென்று, வெளியே தொங்கியபோது கையை விட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாகவும், காவல்துறை ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
डोंबिवलीत एक धक्कादायक घटना घडली आहे. ११व्या मजल्यावरून उडी मारून एका तरुणाने आयुष्य संपवलं. या घटनेचा व्हिडीओ सोशल मीडियावर व्हायरल झाला आहे.#dombivli #maharashtra #CrimeNews pic.twitter.com/u9AQECUZhP
— Lokmat (@lokmat) September 27, 2025
எதிர் விங் கட்டிடத்தில் இருந்து ஒரு இளைஞன் மொபைல் போனில் பதிவு செய்த இந்த வீடியோவில், 11-வது தளத்தில் சுவரில் தொங்கும் ரிஷிகேஷின் உருவம் தெளிவாகக் காணப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் பரவி, பார்வையாளர்களை பதற வைத்துள்ளது.
இச்சம்பவத்தை அறிந்ததும், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக இடத்திற்கு விரைந்தனர். ஆனால், ரிஷிகேஷ் கையை விட்டதும், அவர் கீழே விழுந்து உடனடியாக உயிரிழந்தார். மீட்பு நடவடிக்கை எடுக்கும் முன்பே இது நடந்ததால், அவர்களால் உதவ முடியவில்லை.
இந்த வீடியோவை ஒரு பார்வையாளர் பதிவு செய்து பகிர்ந்ததால், அது உடனடியாக வைரலானது. காவல்துறை ரிஷிகேஷின் உடலை கைப்பற்றி, போஸ்ட்மார்டம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் உள்ளூர் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
