கொச்சி அருகே உள்ள முலந்துருத்தியில் ஜிம்மில் பயிற்சி செய்யும் போது 41 வயது ஆண் ஒருவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இறந்தவர் ராஜு சலப்புரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முலந்துருத்தி பேரும்பிள்ளி பகுதியை சேர்ந்தவர். இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை சோட்டானிக்கரை பாலைஸ் ஸ்கொயரில் உள்ள ANK Fitness Gym-இல் நடைபெற்றுள்ளது.
பொதுவாக 6 மணி அளவில் ஜிம்மிற்கு வருவதாக ஜிம்மின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த நாளில் வேறு பணி காரணமாக ராஜு சுமார் 5.05 மணியளவில் முன்பாகவே வந்து ஜிம்மை திறந்து தனியாக பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளில், அவர் திடீரென மார்பு பகுதியைத் தொடும் வகையில் வெறித்த நடையுடன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதனையடுத்து ஒரு நிமிடத்திற்குள் தரையில் மயங்கி விழுந்தார். சுமார் 20 நிமிடங்கள் வரை அங்கு யாரும் காணவில்லை.
அதன்பின் வந்த மற்றொரு நபர் அவரை கண்டதும் உடனடியாக CPR செய்து பிறரை அறிவித்தார். உடனடியாக அருகிலுள்ள அரக்குநம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது தொடர்பாக சோட்டானிக்கரா போலீசார் “பாரதிய நாகரீக சுரக்ஷா ஸஞ்சிதா” (BNSS) சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
