
சென்னை உயர்நீதிமன்றம் சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா?.
ஒரு நபரை கொலை செய்துவிட்டு நான் கொலை செய்ய விரும்பவில்லை என்று கூற முடியுமா? சைவம் வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம் போல் கருத்து தெரிவிப்பது சரியா?. இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது. இது ஜனநாயக நாடு மக்களோடு தான் நாமும் வாழ்கிறோம் என்ற எண்ணம் அமைச்சருக்கு வரவேண்டும். இதுபோன்று பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்களுடைய எல்லை என்று நினைக்கிறார்கள். அவர்களின் இது போன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும்.
ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா இல்லையா என்பது குறித்து விசாரிப்பது தான். அதன் பிறகு வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் முடிவு செய்யவும் என்று கூறினார்.