
உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக இத்துடன் முடிந்து விட்டதாக மு.க ஸ்டாலின் கூறுகிறார். அவர் பகல் கனவு காண்கிறார். அதிமுகவின் வெற்றிக்காக இங்கு குவிந்திருக்கும் சிப்பாய்களை பாருங்கள். திமுகவுக்கு ஏன் கவலை?.
இங்குள்ள ஒவ்வொருவரும் 25 வாக்குகளை அதிமுக வேட்பாளருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். நமக்கு கூட்டணி பலமானதாக அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம். முதலில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளோம். அதிலிருந்து ஸ்டாலின் பதட்டமாக உள்ளார். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?. பொன்விழா கண்ட கட்சி இது. ஸ்டாலினுக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பாஜக உடன் கூட்டணி அமைத்ததன் நோக்கம் நமது வேட்பாளருக்கு வாக்குகள் சிதறாமல் கிடைக்க வேண்டும். திமுக ஆட்சியை அகற்றப்படும் வேண்டும் என்பதுதான். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். 10 தோல்வி பழனிச்சாமியா? எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற வேண்டும். அதிமுக பாஜக கூட்டணியால் முதல்வருக்கு பயம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.