இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் பயணம் செய்வது மிகவும் எளிது மற்றும் குறைந்த செலவில் பயணம் முடிகிறது. இதன் காரணமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே வாரியம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இனி ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதி பயணிகள் அட்டவணையை தயாரிக்க முடிவு செய்துள்ளது. டிக்கெட் உறுதியானவர்களின் சிரமத்தை கரத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை 4 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு பயணிகளின் அட்டவணை தயாரிக்கப்பட்டது.

இந்த புதிய முடிவால் காத்திருப்போர் பட்டியல் பயணிகள் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியும். மேலும் நிமிடத்திற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை உருவாக்கும் திறன் கொண்ட புதிய முன்பதிவு அமைப்பை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.