
நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வங்கிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய சிரமம் குறைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக சுலபமாக வேலையை முடிக்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் தபால் நிலையங்களில் இன்னும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் வராதது பலருக்கும் கவலையாக இருந்திருக்கலாம். தற்போது மத்திய அரசு அந்த கவலையை நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது இனி தபால் அலுவலகங்களில் யுபிஐ மூலமாக பணம் செலுத்தலாம் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக டிஜிட்டல் பணம் பரிவர்த்தனைகளை பயன்படுத்த தபால் நிலையங்களில் க்யூ ஆர் கோட் ஸ்கேனிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதில் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் தொடர்ச்சியான புகார்கள் வந்ததால் பின்பு அது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலமாக போஸ்ட் ஆபீஸில் பணம் செலுத்து வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் சோதனை முறையாக மைசூர் உள்ளிட்ட இடங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில் அது வெற்றி அடைந்தது. மேலும் இது ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.