
மதுரை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் சென்னை தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸாக பணிபுரியும் நிலையில் ஒரு விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு ஆவடி முதல் நிலை காவலராக வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் போலீசுக்கு 30 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதில் வீரமணி கபடி பயிற்சியாளரும் கூட. இவர்கள் இருவரும் நெருங்கி பழகிய நிலையில் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர்.
பின்னர் வீரமணி தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த பெண்ணை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கூறிய நிலையில் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கிடையில் வீரமணி தன் நண்பரான சரத்குமார் என்பவரை அந்த பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர் ஆட்டோ ஓட்டுனர்.
இவர் அந்த பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசிய நிலையில் பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். அதாவது வீரமணிக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே உள்ள பழக்கம் தெரிந்ததால் பெண்ணுக்கு ஆதரவாக பேசுவது போல் சரத்குமார் பேச பின்னர் நெருக்கம் அதிகமாகி இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதில் அந்த பெண் போலீஸ் கர்ப்பமாகவே சரத்குமார் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.
பின்னர் ஆட்டோ ஓட்டுனரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் கேட்ட நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தங்களுடைய தேவைக்காக சரத்குமார் மற்றும் வீரமணி இருவரும் தன்னை பயன்படுத்திக் கொண்டது தெரியவந்ல நிலையில் இது பற்றி அவர் புகார் கொடுக்கவே போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.