
விசிக அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் 2025 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்தும் நிலையில் அதனை சனாதன சக்திகள் நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா இல்லை விடுதலை சிறுத்தைகளா என்பதுதான் தமிழ்நாட்டின் பாலிடிக்ஸ். தமிழக அரசியலை மதவாத அரசியலாக மடைமாற்ற பலர் முயற்சி செய்கிறார்கள். மதசார்பின்மைக்கு எதிராக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. பாஜகவை தேர்தல் கட்சி என்ற வகையில் எதிர்க்கவில்லை. அவர்களின் அரசியலை தான் எதிர்க்கிறோம்.
நாட்டில் அமையக்கூடிய அரசு என்பது மத சார்பற்ற அரசாக அமைய வேண்டும். ஆனால் பாஜக அரசமைப்பையே எறிய நினைக்கிறது. நாம் கொடியேற்றுவதற்கு, பேனர் கட்டுவதற்கு மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு போராட வேண்டியுள்ளது.
எங்கள் இயக்கம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்காக அல்ல. ஒரு நாள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூட அறிவித்து விடுவேன். எனக்கு இருக்கையில் நம்பிக்கை இல்லை. பிளாஸ்டிக் சேர் அல்லது தரையில் கூட அமர்வேன்.
இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு தான் இந்து மதம் என்று ஒன்று வந்தது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ள நிலையில் இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது. அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள ஜாதி அமைப்பு.
திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல் பாதி கோவிலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா. நான் புண்ணியம் கிடைக்கும் என திருநீறு பூசவும் இல்லை அவமதிக்கும் வகையில் அதனை அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியனாக மாற்ற வேண்டாம். மேலும் சகோதரனாக ஏற்றுக் கொண்டால் போதும் என்று கூறினார்.