
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மதுரையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இயக்குனர் உடனான நட்பின் அடிப்படையில் தானே இந்த படத்தை தயாரித்து உள்ளதாக கூறினார். இதையடுத்து மேலும் கூறிய அவர் திரை உலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரெட் பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம் தான் போதை பொருள் பயன்பாடு.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. சக்தி திருமகன் திரைப்படத்திற்குப் பிறகு அனைத்து நடிகர்களுக்கும் இசையமைக்க உள்ளேன். மேலும் மற்ற நடிகர்களை வைத்து தயாரிக்க உள்ளேன் என்று கூறினார்.
அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது இல்லை அதற்கு வாய்ப்பு இல்லை இது தொடர்பான அறிவு எனக்கு கிடையாது 50 வயது ஆகிவிட்டது. இதற்குப் பிறகுதான் இது குறித்து அறிந்த பின்னர் நான் வர முடியும் பிரபலம் என்ற ஒரே காரணத்தால் நான் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று கூறினார்.