
தமிழகத்தை பிடிக்கப் போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு முட்டாள் என்று திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ. ராசா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, சாதனைகளுக்காக மட்டுமே ஒரு அரசு 50 ஆண்டு காலம் இருக்கும் என சொல்ல முடியாது.
இந்திரா காந்தி இறந்த போது ஆட்சி மாறியது. எம்ஜிஆர் மருத்துவமனைக்கு சென்றபோது மாறியது. 2ஜி 1.76 லட்சம் கோடி ஊழல் என சொன்னார்கள். அப்போது ஆட்சி மாறியது. ஜனநாயகத்தில் நாம் செய்த சாதனைகள் மற்றும் தலைவர்கள் ஆளுமையோடு நிற்காது எதிரிகள் வெவ்வேறு வடிவில் வருவார்கள். சமீபத்தில் மதுரைக்கு வந்த அமைச்சர் டெல்லியை பிடித்து விட்டோம். அரியானா, மகாராஷ்டிராவை பிடித்து விட்டோம் அடுத்த தமிழ்நாடு தான் என்று கூறியிருந்தார்.
முட்டாள்… முட்டாள்.. டெல்லியில் பார்த்த கெஜ்ரிவால் தனிப்பட்ட தலைவன். ஹரியானாவில் தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. மகாராஷ்டிராவில் தோற்கடித்தது ஒரு தனி மனிதன். ஸ்டாலின் தனிமனிதன் அல்ல இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது என்று கூறினார்.