
சென்னை மாவட்டம் பட்டினப்பாக்கம் சாலையில் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்து திடீரென அதிகமான புகை வெளியேறியது.
இதனைப் பார்த்த அந்த நபர் சுதாரித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கினார். அவர் இறங்கிய அடுத்த நிமிடம் வாகனம் மளமளவென தீப்பற்றி எரிந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த நபர் தீயணைப்புத் துறைவிற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரத்திற்கு பின்பே தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பட்டினப்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.