கோயம்புத்தூர் மாவட்டத்தில் 24வது பேரூராதீனம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேரூராதீன மடத்தில் பாரம்பரியம் சிவ வேள்வி பூஜை நடைபெற்றுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது சகோதரருடன் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும், எஸ்.பி. வேலுமணியும் ஒரே இருக்கையில் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

நடந்து முடிந்த முருகர் மாநாட்டில் பெரியார், அண்ணா உள்ளிட்டவர்களை விமர்சித்து வீடியோ வெளியிட்ட போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருந்தது குறித்து சர்ச்சையான நிலையில், தற்போது எஸ்.பி. வேலுமணியும், அண்ணாமலையும் ஒரே இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.