
இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பரவி வரும் வீடியோ ஒன்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வீடியோவில் ஒரு மனைவி, தனது கணவனை அவருடைய மைத்துனியுடன் தவறான உறவில் ஈடுபட்டதாக நேரில் கையும் களவுமாக பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்ததால், அந்த நபர் பெரும் அவமானத்தை எதிர்கொண்டார். இது போன்ற தவறான உறவுகள், இன்று சமூகத்தில் அதிகரித்து வருவதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
இந்த வீடியோ “Ghar Ke Kalesh” என்ற X பக்கத்தில் பகிரப்பட்டு, இதுவரை 3,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றிருக்கிறது. பார்வையாளர்கள் பலரும், “அவனுக்கு நியாயமான மனைவி இருந்தும் இப்படி பண்ணரான்”, “இது போல் மோசமான சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை தேவை” என்று கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிலர், இது போன்ற சம்பவங்கள் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நம்பிக்கையை நசுக்கும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
Extra-Marital affair Kalesh (Wife Caught her Husband with one of her known Relative) pic.twitter.com/DxCtrHNuTA
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 21, 2025
தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. குடும்ப உறவுகள் மற்றும் முறைப்படியான உறவுகளை மதிக்காமல், இவ்வாறு நடக்கும் தவறான செயல்கள், ஒரு குடும்பத்தையே சிதைக்கும் என்பதே அனைவரும் ஒருமனதாக கூறும் கருத்தாக இருக்கிறது. மேலும் இது போன்ற விஷயங்களுக்கு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.