உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் சனௌலி கிராமத்தில் உள்ள காக்ரா ஆற்றில், எருமையை குளிப்பாட்டிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் ஒருவனை முதலை ஒன்று தாக்கி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இதில், சிறுவன்  உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் 8ம் வகுப்பில் பயின்று வந்தார்.

சம்பவத்தின் போது சிறுவன் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென நீரிலிருந்து முதலை ஒன்று வெளியில் வந்து, சிறுவனின் கால்களை தாடையால் பிடித்தது. அதன் பின்னர் கழுத்தையும் கடித்துக்கொண்டு, சிறுவனை ஆழமாக இழுத்துச் சென்றது. அருகில் இருந்தவர்கள் கத்தியும் கூச்சலிட்டும், சிறுவனை மீட்க முடியவில்லை.

“>

 

இந்த சம்பவம் தொடர்பான ஒரு பயங்கர வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், முதலை சிறுவனை இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிறுவனின் உடலை மீட்கும் பணி தொடர்கிறது.