விருதுநகர் மாவட்டம் திருவிந்தாள்புரம் பகுதியில் குடும்ப பிரச்சனையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அந்த பகுதியில் சுந்தரவேலு என்பவர் தன்னுடைய மனைவி பூங்கொடி (35), மகள்கள் ஜெய துர்கா (10), ஜெயலட்சுமி (7) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரவேலு தன்னுடைய மனைவி மற்றும் மகள்களை வெட்டிக்கொலை செய்துவிட்டார்.

பின்னர் அவர் தானாகவே சென்று போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த நிலையில் உயிரிழந்த மூவரின் சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சுந்தரவேலுவிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.