
பிரீமியம் ரயிலான ஆகஸ்ட் கிராந்தி தேஜாஸ் ராஜதானி எக்ஸ்பிரஸில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 19 ஆம் தேதி இரவு, ரயிலின் A1 பெட்டியில் பரிமாறப்பட்ட பசும் பருப்பில் துர்நாற்றம் வீசியதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். பருப்பு கெட்டுவிட்டது இருக்கிறது என்பதை உணர்ந்த சிலர் அதை சாப்பிடவே இல்லை. இந்த உணவின் வாசனை காரணமாக பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
புகார் செய்த பயணிகள் ரயிலின் பெட்டி மேலாளரை அணுகியபோது, அவர் உணவு பழையதா என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கினார். அதற்கு பதிலாக, சாக்குப்போக்கான பதில்களையே அளித்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர். “பருப்பு கெட்டுபோய்விட்டது என பயணிகள் வலியுறுத்தியபோதும், மேலாளர் ஏற்கவே இல்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.
अगस्तक्रांति तेजस राजधानी में यात्रियों को परोसा गया बासी खाना, वायरल हुआ वीडियो।
नई दिल्ली -एनजेडएम से मुंबई सेंट्रल जाने वाली अगस्तक्रांति तेजस राजधानी एक्सप्रेस (NZM-MMCT) में सफर कर रहे यात्रियों ने ट्रेन में परोसे गए खाने को लेकर गंभीर आरोप लगाए हैं। घटना 19 जून की रात लगभग… pic.twitter.com/lgA1iGau7S
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) June 20, 2025
பயணிகள் தரமற்ற உணவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பிரீமியம் ரயிலாகும் தேஜாஸ் ராஜதானியில் கூட உணவின் தரம் சரியில்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. இதற்கான காரணங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.