
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஓட்டுனரான சரவணன் (22) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் கல்லூரியில் படிக்கும் செந்தமிழன் (19) என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அக்கா தங்கையான 12 ஆம் வகுப்பு மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்த மாணவிகளிடம் முதலில் அவர்கள் நட்பாக பழகிய நிலையில் பிறகு ஆபாசமாக பேச ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசிய நிலையில் அந்த மாணவிகளை நிர்வாணமாக வரும்படி கூறியுள்ளனர். அந்த மாணவிகளும் நிர்வாணமாக வந்த நிலையில் அதனை வீடியோ பதிவு செய்த வாலிபர்கள் தாங்கள் சொல்லும் இடத்திற்கு வரவேண்டும் என அவர்களை மிரட்டினர்.
இதற்கிடையில் வாலிபர்கள் இருவரும் மாணவிகளின் நிர்வாண போட்டோக்களை தங்களுடைய நண்பரான வெங்கடேஷ் (24) என்பவருக்கு அனுப்பினர். இந்த வாலிபர் whatsapp குழுவில் மாணவிகளின் நிர்வாண போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இதனை மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்த நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்து மாணவிகளின் தந்தையிடம் கூறினார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.