மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் அமைந்துள்ள குட்சோடி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு அபூர்வமான சம்பவம் தற்போது நாட்டெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான சச்சின் நாக்புரே என்பவர் தனது பண்ணைக்கு சென்றபோது, தவறுதலாக ஒரு விஷபாம்பின் மீது கால் வைத்துள்ளார்.

அதனால், அந்த பாம்பு சச்சினை கடித்தது. அதிர்ச்சியாக, அந்த விஷபாம்பு சுமார் 5 நிமிடத்துக்குள் வலியில் தவித்து இறந்து போனது. இதுபற்றி வனத்துறை அதிகாரி கூறுகையில், இது மிகவும் அபூர்வமான சம்பவம் என தெரிவித்தார்.

சச்சின் நாக்புரே கடந்த 7–8 ஆண்டுகளாக வேப்பம், பிசுண்டி, மாம்பழம், கரஞ்சி, துவரை போன்ற மரக்குச்சிகளைப் பயன்படுத்தி பல்லைக் துலக்கியதை வழக்கமாக வைத்துள்ளார். அவரின் கூற்றுப்படி, இந்த இயற்கை மரப்பகுதிகள் கலந்து உருவான நுண்ணுயிர் மாற்றங்கள் அவரின் இரத்தத்தில் பாம்புக்கு தீங்கிழைக்கும் தன்மையை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்புகிறார்.

இது, பாம்பு கடித்த உடனே அது இறந்ததற்கான ஒரு காரணமாக இருக்கலாம் என வனத்துறை ரேஞ்சர் தர்மேந்திர பிசென் கூறினார். சம்பவம் நடந்ததும் சச்சின் தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனே வந்து பாம்பையும் அவரையும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவ பரிசோதனையில், அவரை கடித்தது ‘டொங்கர்பேலியா’ என்ற மிகவும் விஷம் உள்ள பாம்பு என உறுதி செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சச்சின் தற்போது உயிருக்கு ஆபதில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த அதிசய நிகழ்வு சமூக ஊடகங்களில் பரவி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.