
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அவருக்கும் பிரிமியர் கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் பெண் உரிமையாளருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக சில நாட்களாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இது குறித்து அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது திருமணமா… அமைதியாக இருங்கள் நண்பர்களே… வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
அனிருத் குறித்து இதற்கு முன்பு இப்படி ஏதாவது காதல் திருமண வதந்திகள் வந்ததுண்டு. ஆனால் அவற்றை கடந்து போய்விடுவார். இந்த முறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 34 வயதாகியும் இன்னும் பேச்சுலர் ஆகவே இருக்கிறார்.
இவர் தற்போது கூலி, மதராசி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜனநாயகன், ஜெயிலர் 2 தமிழ் படங்களுக்கும், கிங்டம், மேஜிக் தி பாரடைஸ் ஆகிய தெலுங்கு படங்களுக்கும், கிங் ஹிந்தி படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.