
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயங்கர விபத்துக்குள்ளானது. AI-171 எனப் பெயரிடப்பட்ட இந்த போயிங் 787-8 விமானம், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் விழுந்ததில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ்காரர்கள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடியர் அடங்குவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
விமானத்தில், 8,200 மணிநேர பறக்கும் அனுபவமுள்ள கேப்டன் சுமீத் சபர்வாலும், 1,100 மணிநேர பறக்கும் அனுபவமுள்ள முதல் அதிகாரி கிளைவ் குந்தரும் இருந்தனர். இந்த சம்பவம் விமானத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரிதாபகரமான விபத்தில் பலர் குடும்பத்தையே இழந்துள்ளனர். பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் இரங்கல்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, “இந்த விபத்தில் என் மாமாவின் மகன் கிளைவ் குந்தர் உயிரிழந்துள்ளார்” எனக் கூறி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதேபோன்று பலரும் தங்கள் குடும்பங்களை இழந்து ஆழ்ந்த வேதனையில் தவிக்கிறார்கள்.