
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து சிதறியது.
பெரும்பாலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ள நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் ஒரு பகவத்கீதையை பாதுகாப்பான நிலையில் கண்டுபிடித்துள்ளனர். புத்தகத்தின் ஒரு பக்கமும் எரியவில்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
A passenger aboard the ill-fated AirIndia flight was carrying a copy of the Bhagavad Gita. In a remarkable turn, the sacred book was found intact and unharmed amidst the wreckage at the crash site. 🙏 pic.twitter.com/VBu4jYuvIi
— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 13, 2025
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. புத்தகம் முற்றிலும் சேதமின்றி இருப்பதை பார்த்த நெட்டிசன்கள், இது ஒரு அதிசயம் என்றும், இறை நம்பிக்கையை வலுப்படுத்தும் ஒரு உணர்ச்சிமிகு தருணம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
“பேரழிவின் மத்தியில் பகவத் கீதையின் பாதுகாப்பு நெஞ்சை தொடும் தருணம்” என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் லண்டனுக்குச் செல்லும் பயணியாக யாரோ ஒருவர் எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒரே பயணியான விஸ்வாஸ் குமார் ரமேஷ் கூறும் அனுபவம் அனைவரையும் கலங்கடிக்கிறது. விமானம் புறப்பட்டு 30 வினாடிகளுக்குள் பெரிய சத்தம் எழுந்தது.
அதன்பின் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. விபத்துக்குப் பிறகு சுயநினைவைத் திரும்பிய விஸ்வாஸ், தன்னைச் சுற்றி பல உடல்களைப் பார்த்ததும் பயந்துவிட்டதாக கூறியுள்ளார். அவசர கதவின் வழியாக தப்பிய அவர் தற்காலிக சிகிச்சைக்கு பின்னர் அவர் நிலைமை சீராகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.