
18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்ற RCB அணியின் வரலாற்று வெற்றியை கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் போதியதாக இல்லாத காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 47 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பொறியியல் மாணவர் பூமிக் லக்ஷ்மணும் ஒருவர்.
இந்த மர்மமான துயர சம்பவத்தில் அவரது தந்தை லக்ஷ்மண் அழுது உருகும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. தனது மகனின் கல்லறையருகே தலை வைக்கின்ற அவர், “என் மகனுக்காக வாங்கிய நிலமே இப்போது நினைவுச்சின்னமாக இருக்கிறது. இங்கேயே இருக்க விரும்புகிறேன்,” என அழுதார். “என் மகனுக்கு நடந்தது வேறொருவருக்கும் நடக்கக்கூடாது,” என அவருடைய வார்த்தைகள் நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ಕೊಲೆಗಡುಕ ಸಿಎಂ @siddaramaiah ಅವರೆ, ಕೊಲೆಗಡುಕ ಡಿಸಿಎಂ @DKShivakumar ಅವರೆ,
ನೀವು ಮನಸ್ಸು ಮಾಡಿದ್ದರೆ ಐಷಾರಾಮಿ ಹೋಟೆಲ್ನಲ್ಲಿ ನಿಮ್ಮ ಮಕ್ಕಳು ಹಾಗೂ ಮೊಮ್ಮಕ್ಕಳೊಂದಿಗೆ ಕಪ್ ಜೊತೆ ಫೋಟೋ ತೆಗೆಸಿಕೊಳ್ಳಬಹುದಿತ್ತು. ಆದರೆ ವಿಧಾನಸೌಧದ ಮೆಟ್ಟಿಲುಗಳ ಮೇಲೆಯೇ ಫೋಟೋ ತೆಗೆಸಿಕೊಳ್ಳಬೇಕೆಂಬ ನಿಮ್ಮ ಹಠ 11 ಕುಟುಂಬಗಳು ಪ್ರತಿನಿತ್ಯ… pic.twitter.com/l27yBoeiiX
— BJP Karnataka (@BJP4Karnataka) June 7, 2025
இந்த வீடியோவை கர்நாடக பாஜக பகிர்ந்துள்ளதோடு, மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. “சித்தராமையா, டி.கே. சிவகுமாரா, உங்கள் புகைப்பட ஆர்வம் காரணமாக 11 குடும்பங்கள் கண்கலங்கிக் கிடக்கின்றன. இதற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்,” எனக் கூறியுள்ளது. பலரும், “ஒரு புகைப்பட வாய்ப்பு பல உயிர்களை எடுத்தது,” என சோகமுடன் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.