அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபல படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இதனுடைய மூன்றாவது சீசன் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொலராடோவில் இஸ்ரேலுக்கு ஆதரவான குழு தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரஷீத் கான், அஸ்மத்துலா ஓமர்சாய், நவீன் உல் ஹக், நூர் அகமது ஆகிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் லீக் போட்டியில் பங்கேற்க சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் மேஜர் லீக் கிரிக்கெட் மிகப்பெரிய விளையாட்டு தொடர் என வரையறுத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான அனுமதி பெறுவதற்கு ஆலோசத்து வருவதாக கிரிக்கெட் தொடரை நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.