தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு தற்போது அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். இன்று அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கரிடம் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் தமிழகத்தில் தற்போதைக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் உயராது. அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக பரவும் செய்திகள் வதந்திதான். இதில் உண்மை கிடையாது என்று கூறினார். மேலும் நீதி மன்றத்தின் உத்தரவுபடி தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வை கொண்டுவர பொது மக்களிடம் கருத்து கேட்பதாகவும் அமைச்சர் கூறினார்.