சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் என்று அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரரான ஹென்றிக் கிளாஸனும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் தற்போது டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்றார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு வீரர்கள் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.