நீயா நானா” நிகழ்ச்சி எப்போதும் சமூகத்தில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறதோடு, அந்த உண்மைகளைச் சந்திக்கும் நபர்களின் மனவலிகளையும் வெளிப்படுத்தும் மேடையாக மாறியுள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், திருமணம் ஆகாத ஆண்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல் குறித்து ஒருவர் திறமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. “தயவுசெய்து திருமணம் ஆகாத ஆணிடம், ‘ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை?’ என்ற கேள்வி கேட்காதீர்கள்” என அவர் கோரியபோது, அது பலருடைய மனதைக் கிளறியது.

அவர் சாதி, மதம், வேலை பார்க்கும் பெண் போன்ற எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தாலும், திருமணம் நடக்காத ஒரே காரணம் – அவரது மாத சம்பளம் ₹30,000 மட்டுமே என்பதே என வருத்தத்துடன் கூறினார்.

“இந்த வருமானத்துடன் குடும்பத்தை எப்படி நடத்துவாய்?” என்ற கேள்வி அவரை மனதளவில் பலமுறை உடைத்துவிட்டதாக அவர் சோகமுடன் பகிர்ந்தார். உண்மையில், வாழ்க்கையை பகிர தயாரானவன், உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவன், பெண்ணின் உணர்வு, சுதந்திரம், விருப்பங்களை புரிந்துகொள்கிறவன் என்பவைகள் தான் முக்கியம், சம்பளம் அல்ல.

 

View this post on Instagram

 

A post shared by Bannu Pasanga Da (@kalakkal_tamil_memes)

“>

ஆனால் இன்று பலரது திருமணத் தேர்வுகள் ‘நிதி நிலை’ என்ற ஒரு கோட்டைக்குள் சிக்கி விட்டது. ₹30,000 சம்பாதிக்கும் ஒருவருக்கு திருமணம் என்பது கனவாகவே இருக்க வேண்டுமா? என்ற கேள்வி இந்த வீடியோ மூலம் சமூகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த உணர்ச்சிகரமான உரையால் பலர் தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பிக்கையூட்டும் நிகழ்வாக உள்ளது.