விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நடிகராக நடித்து வருகிறார். இவர் முதலில் சகாப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து விஜயகாந்த் உடன் தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வந்தார்.

ஆனால் அப்படம் விஜயகாந்த் மறைவு காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது படைத்தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்த வந்தார். இப்படத்தை இயக்குனர் அன்பு இயக்கியுள்ளார்.  இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று இப்படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம்.. படைத்தலைவன் திரைப்படம் மேம் 23ம் தேதி வெளியாக இருந்த நிலையில் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்திருந்தார்.