
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் மக்கள் தங்களது நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வந்த நிலையில் தனது ஆதார் கார்டு மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்றவை இந்தியாவில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரரின் ஆவணங்களை சரி பார்க்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அதுவரையில் மனுதாரர் நாடு கடத்தப்படுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.