சென்னை ராயப்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக பஹல்காம் தாக்குதலின் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, மெகா கூட்டணி அமைக்க அதிமுக வியூகம் வகுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் திமுக அரசை வீழ்த்துவதற்கு அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் வெற்றி கூட்டணி அமைத்ததற்கு இச்செயற்கை குழு முழு மனதுடன் ஆதரவு அளித்து அங்கீகரிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.