
தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி(45). இவரது மனைவி கற்பக சுந்தரி(32). இவர் ஒட்டங்காடு அரசு உதவிபெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
சிறுது நேரம் கழித்து கற்பக சுந்தரி அவரது வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கற்பக சுந்தரியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராமமூர்த்தியை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கற்பக சுந்தரியின் உறவினர்கள் அவரது இறப்பிற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.