தமிழக பாஜக கட்சியின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில் அவருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போடமாட்டேன் என்று அண்ணாமலை சபதம் போட்டிருந்தார். அதற்கு முன்பு அவர் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்ட நிலையில் பின்னர் செருப்பு போட மாட்டேன் என்றும் திமுகவை ஆட்சியில் இருந்து அலட்சிய பிறகுதான் செருப்பு போடுவேன் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் அண்ணாமலையின் கைகளில் செருப்பை கொடுத்து அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார். இன்று பதவி ஏற்பு விழாவின்போது நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்ததால் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொணடு மீண்டும் செருப்பு போட்டார். மேலும் சபதம் நிறைவேறுவதற்கு முன்பாகவே அண்ணாமலை செருப்பு போட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.