
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று டெல்லிக்கு சென்ற நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார். இதை தொடர்ந்து தற்போது செங்கோட்டையனக்கு ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது உளவுத்துறை அறிக்கையின்படி செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே உளவுத்துறை அறிக்கையின் படி டிஜிபி சங்கர் ஜ வால் செங்கோட்டையன் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது செங்கோட்டையனுக்கு ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு கடந்த 14ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.