சுவிட்சர்லாந்தின் ஜூரிக் நகரிலிருந்து ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரம் நோக்கி புறப்பட்ட SWISS ஏர்லைன்ஸ் விமானத்தில் (Flight LX918) 33 வயதான ஜெர்மன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் விமானப் பயணத்தின் போது அவதூறாக நடந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை காலை 7:40 மணியளவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது  போது நடைபெற்றது.

அதாவது அந்த நபர் தனது கைகளை உள்ளாடையில் கை வைத்துக்கொண்டு சுய இன்பம் செய்து தவறான செயலில் ஈடுபட்டதாக கேபின் பணியாளர்களிடம் சக பயணி ஒருவர் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அந்த நபரை  விமான ஊழியர்கள் எச்சரித்தனர். அவர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்த பின்னர் அவர் தனது செயல்களை நிறுத்தியுள்ளர்.

அந்த விமானம் டிரெஸ்டனில் தரையிறங்கியவுடன், அந்த நபரை ஜெர்மனி போலீசார் கைது செய்தனர். அவர் இரு பெண் பயணிகளின் அருகிலேயே சுய இன்பத்தில்  ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், “தனது ஆணுறுப்பு வெளியில் தெரியவில்லை என்பதால் தவறு செய்தேன் என்பதைக் கவனிக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.