
தாய்லாந்தில் ஓய்வுக்காக வந்திருந்த ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணியின் அமைதியான நீச்சல் அனுபவம் ஒரு நிமிடத்தில் சோகமாக மாறியது. அதாவது கேன் ஸ்மித் என்ற அந்த பிரிட்டிஷ் நபர், ஒரு நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தபோது, ஒரு குரங்கு வந்தது. முதலில் ஒரு குரங்கு மட்டும் வந்த நிலையில் திடீரென பல குரங்குகள் அந்த இடத்தை சூழ்ந்தது. இதனால் அவர் அச்சத்தில் உறைந்தார். அந்த குரங்குகள் அருகில் வந்தபோது, “நீங்கள் என்னை நெருங்காதீர்கள்” என்று பலமுறை கூறிய கேன், பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயற்சித்தார்.
இந்த சம்பவத்தை கேன் ஸ்மித் தனது டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். “என் வாழ்க்கையில் கண்டு பதற்றமடைந்த தருணம் இது தான்” என்றும், “ஒரே ஒரு குரங்குடன் தொடங்கியது பின்னர் முழு கும்பல் வந்தது” என்றும் அவர் வீடியோவின் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் நெட்டிசன்கள் பலரும் குரங்குகளின் நடத்தை மற்றும் கேன் ஸ்மித் அதை கையாண்ட விதத்தை பாராட்டி வருகிறார்கள்.
View this post on Instagram