
சமூக வலைதளத்தில் தினமும் பல்வேறு சம்பவங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் தனது வேதனையை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் ஒரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்காக சென்றுள்ளார். அப்போது வானத்தில் விமானம் பறந்து சென்றுள்ளது.
இந்த இளைஞர் நேர்காணலின்போது வானத்தில் பறந்து சென்ற விமானத்தை வேடிக்கை பார்த்துள்ளார். இதனால் அவருக்கு கிடைக்க இருந்த வேலையை இழந்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். அவர் வானத்தை பார்த்துக் கொண்டே மேலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இளைஞரின் உடல் மொழியும், தெளிவின்மையும் நிராகரிக்க காரணங்களாக இருந்ததாக மேலாளர் தெரிவித்துள்ளார்.