
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் உட்பட 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டியை அழைத்துள்ளார். மேலும் பாஜக மற்றும் பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் சபாநாயகர் அவையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகர் நடுநிலையாக செயல்படுவதாக ஆதரவு தெரிவித்து பேசி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்கலை கிண்டல் செய்கிறார்.
நாங்கள் அவையை விட்டு வெளியேறினால் போங்க போங்க என்ற கிண்டல் அடிக்கிறார். பேரவை தலைவர் பெரும்பாலான நேரங்களில் ஒரு தலை பட்சமாக மட்டுமே செயல்படுகிறார். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். சபாநாயகரின் செயல்பாடுகள் என்பது விதிகளுக்கு முரணாக இருக்கிறது. அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது பேரவை தலைவர் அவசரப் படுத்துகிறார் என்று கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது நாங்களும் பேச ஆரம்பித்தால் சலசலப்பு வந்துவிடும் என்பதால் அமைதியாக இருக்கிறோம். பேரவை தலைவர் அனைவருக்கும் நியாயமாக நடந்து கொள்கிறார் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.