அமெரிக்காவில் உள்ள பிரபல எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் ஆண்ட்ரூ ஹாமல் இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பயணத்தின் போது எதிர்கொண்ட மோசடி சம்பவம் குறித்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவில் ஹாமல் ஜெய்ப்பூரில் உள்ள தனது ஹோட்டலுக்கு டாக்ஸியில் சென்றுள்ளார். அவர் ஹோட்டலை சென்றடைந்த பின் 30 நிமிடங்கள் கழித்து அந்த ஓட்டுநர், ஹோட்டல் மேலாளர் உடன் வந்து தனது அறையின் கதவை தட்டி டாக்ஸி டிரைவர் தவறுதலாக அதிகமான பணத்தை கொடுத்து விட்டதாகவும், அதனை திருப்பித் தர வேண்டும் என்றும் மேலாளர் வற்புறுத்தியதாக தெரிவித்தார்.

ஆனால் ஹாமல் இது உண்மையல்ல என்று கூறிவிட்டு கதவை அடைத்துள்ளார். ஆனால் ஹோட்டல் மேலாளரும், ஓட்டுனரும் சேர்ந்து 45 நிமிடங்களுக்கு மேல் கதவை தட்டி துன்புறுத்தியுள்ளனர். பயணிகளிடம் தவறாக கூறி பணத்தை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கில் டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் ஹோட்டல் நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட அந்த ஹோட்டலின் சர்வதேச எண்னை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து ஹோட்டல் மேலாளர் இடம் இது குறித்து புகார் அளித்திருப்பதாக கூறியதும் மேலாளர் பணம் வசூலிப்பதிலிருந்து பின்வாங்கியுள்ளார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் எதிர்கொள்ளும் சமூக நம்பிக்கைற்ற சூழ்நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு பயணிகள் தங்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மையுள்ள ஹோட்டல்களை தேர்வு செய்ய வேண்டும். எந்த ஒரு சந்தேகம் படும்படியான சூழ்நிலையாக இருந்தாலும் தனது நாட்டு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகும்.