அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை உத்தரவிட்டு வருகிறார். இதன்படி சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவது, ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிப்பு, திருநங்கைகளுக்கான தடை போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளார். அதில் ஒன்றுதான் பெடரல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு. அமெரிக்க அரசாங்கத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில்  செயல்திறன் அற்றவர்கள், தனக்கு எதிராக செயல்படுகிறார்கள் என வகைப்படுத்தி ஆட்குறைப்பு செய்யப் போவதாக அதிரடி உத்தரவை அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அதிபர் ட்ரம்ப் அவற்றைக் கண்டு கொள்ளாமல் ஆட்குறைப்புக்கு தயாராகலாம் என அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி உள்துறை, எரிசக்தி, பணி ஓய்வு, பெற்றோர் விவகாரங்கள்துறை, வேளாண்துறை, சுகாதாரத்துறை சேவைகள் துறை என அனைத்து துறைகளிலும் ஆட்குறைப்பு நடைபெற்றுள்ளது. இதில் தற்போது 9500க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சில அமைப்புகளில் 70% வரை ஆட்குறைப்பு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்த ஆட்குறைப்பு தர நிலையில் ஓராண்டு கூட நிறைவு பெறாத பணியாளர்கள், பணி பாதுகாப்பு இல்லாத ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர். செயல் திறனற்ற துறைகளில் உள்ளவர்கள் தானாகவே ராஜினாமா செய்தால் சலுகைகள் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் ராஜினாமா செய்ய முன் வருகின்றனர். பெடரல் அரசாங்கம் கடனில் இருப்பதாக கூறி ட்ரம்ப் தேவையற்ற பதவிகளுக்கு அதிக பணம் வீணடிப்பதை பண இழப்பாக கருதுகிறார். இதனால் இந்த பணி நீக்க நடவடிக்கை தேவையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ளார்.