
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான முழு அளவிலான போர் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இருந்து வந்தது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததால், பல்வேறு நாடுகளும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றன. இதுபோன்று கடந்த ஜனவரி 20ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையின் இரண்டாவது அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் இந்தப் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
“இந்த ஆபத்தான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா முன்வர வேண்டும்”என டிரம்ப் கூறியுள்ளார். இது இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் 2022-ல் உக்ரேனுடன் போர் ஏற்பட்டு இருக்காது. டிரம்ப் ஒரு புத்திசாலியான நபர், நடைமுறை சார்ந்த நபரும் கூட என கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா உதவினால் உக்ரைனுடன் நடைபெறும் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யா முன் வரும் என்றும் கூறியுள்ளார்.