
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44 வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நடித்து உள்ளார். இதற்கு அடுத்தது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள அவரது 45 வது திரைப்படம் குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யா மற்றும் திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மௌனம் பேசியதே மற்றும் ஆறு திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா, திரிஷா ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தக் கூட்டணி புதிதாக அமைந்துள்ளதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளனர்.