
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் 10 12 ஆம் வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் நாளை முதல் ஆன்லைனில் நடைபெறும் என டெல்லி முதல்வர் அதிஷி அறிவித்துள்ளார். டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் 10, 12-ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து அரசு முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒற்றைப்படை பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்கலாம். குழந்தைகள், முதியவர்கள், சுவாச, இருதய பிரச்சனை உள்ளவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். டெல்லிக்குள் அத்தியாவசிய சேவையைத் தவிர மற்ற லாரி போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.