
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுக கண்டிப்பாக அடுத்த சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும். திமுக கூட்டணி வலிமையாக இல்லை. அவர்களின் கூட்டணியில் பிரச்சனை இருக்கிறது. அதிமுக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டணி அமைக்கும் முன்பு நாம் கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் கட்சியில் கூட்டங்களை நடத்த வேண்டும்.
நாம் வலிமையாக இருந்தால் தான் கட்சிகள் கூட்டணிக்கு தயாராக இருக்கும். மேலும் நாம் வளமையாக இருந்தால் தான் கூட்டணியில் அதிக இடங்களை வைத்துக் கொள்ள முடியும். பெரிய கட்சிகள் வந்தால் கூடுதல் இடங்களை கொடுக்கலாம். புதிய நிர்வாகிகளை சேர்க்க வேண்டும். செயல் வீரர்களின் கூட்டம் நடத்தினால் தான் கட்சி வலிமை அடையும். முக்கியமாக புதிய பூத் கமிட்டி அமைத்து ஏற்கனவே அமைக்கப்பட்ட பூத் கமிட்டியை புதுப்பிக்க வேண்டும்.
விஜயின் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி உருவாக்கப்பட்டால் அவர்களுக்கு அதே இடங்களை கொடுக்க அதிமுக எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறாராம். கூட்டணி வேண்டுமென்றால் நாம் வலிமையாக இருந்தால் தான் கட்சிகள் கூட்டணிக்கு தயாராக இருக்கும். பெரிய கட்சிகள் வந்தால் கூடுதல் இடங்களை கொடுக்கலாம் என எடப்பாடி பேசியது இப்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அவர் விஜய்க்கு தான் சூசகமாக அழைப்பு விடுத்துள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.