
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் கர்களா தாலுகாவில் பாலகிருஷ்ண கல்யாண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரதிமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிரதிமா அதே ஊரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பதிவிட்டு வந்தார். அப்போது பிரதிமாவுக்கும் திலீப் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் பிரதிமா தான் திலீபுடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவரை குடும்பத்தினர் திட்டி அறிவுரை கூறி பாலகிருஷ்ணா உடன் அனுப்பி வைத்தனர்.
சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் கடந்த 20ஆம் தேதி மர்மமான முறையில் பாலகிருஷ்ணா உயிரிழந்தார். அவரது முகத்தில் பல்வேறு இடங்களில் காயங்களும் கீறல்களும் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது பிரதிமா திலீப் துணையுடன் பாலகிருஷ்ணாவின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். மேலும் பிரதிமா பாலகிருஷ்ணாவுக்கு ஸ்லோ பாய்சன் வாங்கி கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் பிரதிமா மற்றும் திலீப் ஆகி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.