பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அங்கு கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. மேலும் கலாச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த பெட்ரோலிய டேங்கர் லாரியை அதிகாரிகள் பிடித்து மது பாட்டில்களை கைப்பற்றி உள்ளனர். இதில் டேங்கர் லாரியை ஓடி வந்த ஓட்டுநர் தப்பித்து ஓடிய நிலையில் நாகாலாந்து மாநில பதிவு எண் கொண்ட லாரியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அந்த பெட்ரோலிய டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அந்த மது பானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஹாப்பி ஓடிய ஓட்டுனரை வலை வீசி தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் சட்ட விரோதமாக அடிக்கடி மது பாட்டில்கள் மாநிலத்தில் கொண்டுவரப்படுகின்றன. சில சமயங்களில் ஆம்புலன்ஸில் கூட மது பாட்டில்கள் கொண்டுவர படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.