தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொல்லாகுடம் பகுதியில் இருக்கும் சதீஷ் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டுப்பாடம் முடிக்காத 6-ஆம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். சிறுவனின் உடலில் காயங்கள் இருந்தது. இதனை பார்த்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆசிரியர் மாணவனை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.